திராவிட இயக்க தமிழர் பேரவை காரைக்குடி கிளை தொடக்கம்
காரைக்குடியில் திராவிட இயக்க தமிழர் பேரவை கிளைத் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்குடியில் திராவிட இயக்க தமிழர் பேரவை கிளைத் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நகரத் தலைவர் ந.ஸ்டீபன் வரவேற்றார். நகரச் செயலர் ந.நவில் தலைமை வகித்துப் பேசினார். திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில இலக்கிய அணித் தலைவர் மு.பாரி, ஒருங்கிணைப்பாளர் யாழ்.புலேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக மாநில இலக்கிய அணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் காரைக்குடி கிளையை தொடங்கி வைத்துப் பேசினார். திமுக நகரச் செயலர் நா.குணசேகரன், மாவட்ட தி.க. செயலர் தி. என்னாரெசு பிராட்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மேலும் கருத்தரங்கில், திராவிட இயக்க எழுத்தாளர் வே.மதிமாறன் நாட்டை கெடுக்கும் மதவாதம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நகர பொருளாளர் த.இளங்கதிர் நன்றி கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.