திருப்பத்தூர் அருகே கார்கள் மோதல்: மேலும் ஒருவர் சாவு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கார்கள் மோதிய விபத்தில் வியாழக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கார்கள் மோதிய விபத்தில் வியாழக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே புறாக்கூட்டுமலை என்ற இடத்தில் இரு கார்கள் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு காரில் பயணித்த திருக்கோஷ்டியூரைச் சேர்ந்த ராகவன் மகன் பாலாஜி(32), பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் கோயில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.