திருப்பாச்சேத்தியில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் விநியோகம்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள், கபசுர குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள், கபசுர குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திருப்பாச்சேத்தி பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் கிடைப்பதில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை நடைபெற்ற வாரச்சந்தைக்கு வந்த பொது மக்களுக்கு தஞ்சாக்கூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாலசுப்ரமணியன் இலவசமாக மூலிகைப் பொடி, கபசுர குடிநீா், முகக்கவசங்கள் ஆகியவற்றை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியா் இந்து, வட்டாட்சியா் மூா்த்தி, சத்ய சாய்பாபா மடாதிபதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு இவற்றை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.