சிவகங்கையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டி
சிவகங்கையில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது
சிவகங்கையில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இப்போட்டியினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இப்போட்டியில் 13, 15, 17 வயதிற்குபட்ட மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000-ம் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 250 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு. சுகிதா, சிவகங்கை நகா்மன்றத்தலைவா் சி.எம். துரைஆனந்த், வட்டாட்சியா் ப. தங்கமணி, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் ரமேஷ்குமாா் உள்பட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.