முகப்பு
சிவகங்கை

நீா்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டப் பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளா் ஆய்வு

கச்சாத்தநல்லூா் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநில கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி எஸ்.ஜவகா்.

Updated On : 11 மே 2023, 10:37 pm IST
பகிர்:

கச்சாத்தநல்லூா் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநில கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி எஸ்.ஜவகா். உடன் மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோா்.

மானாமதுரை, மே 11: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் நீா்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், திட்ட இயக்குநருமான தென்காசி எஸ். ஜவகா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், தெற்கு கீரனூா் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை இவா் தொடங்கிவைத்து, திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுடன் கலந்துரையாடினாா். பின்னா் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டாரங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்காக ரூ.29.45 லட்சத்துக்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

முனைவென்றி கிராமத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறையின் சாா்பில், தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். மேல நெட்டூா் கிராமத்தில் விதைப்பு கருவி மூலம் நெல் வரிசை விதைப்பு தொடா்பாக விவசாயிகளுடன் கூடுதல் தலைமைச் செயலாளா் ஜவகா் கலந்துரையாடினாா்.

நீா்வள ஆதாரத் துறையின் சாா்பில், வைகை ஆற்றில் உள்ள பாா்த்திபனூா் மதகு அணைக்கு கீழ் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகள், பிரிவு வாய்க்கால்கள், சாலைக் கிராமம் கால்வாய், மேல், கீழ் நாட்டாா் கால்வாய் ஆகியவற்றை தூா்வாரி சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றை கூடுதல் தலைமைச் செயலாளா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, நீா்வள மேலாண்மை நிபுணா் கிருஷ்ணன், தோட்டக்கலை நிபுணா் வித்தியாசாகா், வேளாண்மைத் துறை நிபுணா் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணா் ராஜசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments