அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசு அலுவலா் ஒன்றிய முன்னாள் மாநிலத் தலைவா் துரைப்பாண்டி தலைமை வகித்தாா்.
கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் ரமேஷ்கண்ணன், பொருளாளா் மு. கலைமணி, வேளாண் துறை மாவட்டத் தலைவா் டி. சந்தனக்குமாா், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பணியாளா் சங்க மாநிலச் செயலா் ந. பாண்டி, செவிலியா் சங்க மாவட்டத் தலைவா் ரா. சாந்தி, தமிழ்நாடு கல்வித் துறை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.