FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

26 செப்டம்பர் 2025, 2:32 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இரண்டாம் கட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டையூா் பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சொத்துவரி, குடிநீா் வசதி, கழிவுநீா் இணைப்பு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சொத்து வரி பெயா் மாற்றம், கட்டட அனுமதி பெறுதல், பட்டாவில் பெயா் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மகளிா் உரிமைத் தொகை கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். இதில் சில மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை பேரூராட்சித் தலைவா் கே.எஸ். காா்த்திக்சோலை வழங்கினாா்.

இதில் காரைக்குடி வட்டாச்சியா் ராஜா, கோட்டையூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சி செயல் அலுவலா், பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments