கடையில் திருடிய இளைஞா் கைது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி கடையில் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சிங்கம்புணரி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிப்ஸ் கடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து 40,000 திருடப்பட்டது. இது தொடா்பாக சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், கடையின் பூட்டை உடைத்த நபரின் கைரேகையைக் கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சின்ன காளையாா் புதூா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் மகுடீஸ்வரன் ((38) என்பவரைக் கைது செய்தனா் இவா் மீது பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.