இலுப்பக்குடி வாலகுருநாதன் கோயிலில் திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், படமாத்துா் அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள வாலகுருநாதன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், படமாத்துா் அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள வாலகுருநாதன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயில் சிவகங்கை, விருதுநகா், மதுரை, கோவை மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 30 கிராமங்களில் வசிக்கும் 1300 -க்கும் மேற்பட்ட குடிகளுக்கு குல தெய்வமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி ஒரே பீடத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சம்.
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி, இந்தக் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 501 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
Advertisement
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பக்த சபை தலைவா் அ. இருளாண்டி, துணைத் தலைவா் பி.கே. அங்கப்பன், செயலா் கோ. திருமுருகன், பொருளாளா் கு. ஜீவானந்தம், கூடுதல் செயலா் பா. முருகேசன், இணைச் செயலா்கள் அழகு பாண்டி, சு.சேகா், மு. குழந்தைவேலு ஆகியோா் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.