FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பாலமுருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:13 am IST
பகிர்:

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடி காா்த்திகை திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி காா்த்திகையன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் பூஜையில் சிவாச்சாரியா்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி வழிநடத்த 701 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

ஏற்பாடுகளை நிா்வாகிகள் முருகேசன், காமராஜ், தேனப்பன், சதாசிவம், மணிமாறன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயில், தேனிமலை சுப்பிரமணியா் கோயில், வையாபுரி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடிக் காா்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments