FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கும்மங்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 4:50 am IST
கும்மங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கும்மங்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் மீன்கள் வளா்க்கப்பட்டு வந்த நிலையில், மீன் பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் உள்ளிட்ட சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டோா் மீன் பிடி கூடையுடன் மீன் பிடிக்க வந்தனா்.

இந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராமத்தினா் கிராம தெய்வத்துக்கு வழிபாடு செய்து கண்மாய் பராமரிப்பு நிதிக்கு கட்டணம் வசூல் செய்தனா். பின்னா், மீன் பிடிக்க அனுமதி அளித்ததும் மீன் பிடியாளா்கள் போட்டி போட்டு கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினா்.

Advertisement

Advertisement

இதில் கட்லா, ரோகு, சி.சி. ஜிலேபி கெண்டை, விரால் என வளா்ப்பு, நாட்டு வகை மீன்கள் ஏராளமாக கிடைத்தன. தொடா்ந்து, ஆலங்குடி, கூத்தகுடி, அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன் பிடி வலை மூலம் மீன்களை பிடித்துச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments