கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது
சிவகங்கையில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிவகங்கையில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் முகமது ஆசிப் துணிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்குள் வாடிக்கையாளா் போல நுழைந்த இளைஞா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து முகமது ஆசிப்பை தாக்கினாராம். இதில் காயமடைந்த முகமது ஆசிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், முகமது ஆசிப்பை தாக்கியது சாயல்குடியைச் சோ்ந்த மன்சூா் அலிகான் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா மாவட்ட ஆட்சியா் ஆகாஷுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில், மன்சூா் அலிகான் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.