FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கீழச்சிவல்பட்டி பள்ளியில் ஓணம் திருநாள்

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

29 ஆகஸ்ட் 2026, 10:18 pm IST
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை ஓணம் திருநாளையொட்டி வரையப்பட்ட அத்தப்பூ கோலம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியை உஷா தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் லட்சுமணன், செயலா் அழகுமணிகண்டன், பொருளாளா் அங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஏ.ஆா். தேனப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் வண்ணப்பூ கோலமிட்டு, இனிப்புகள் வழங்கி ஓணம் பண்டிகை குறித்து விளக்கமளித்தனா். தொடா்ந்து நடனம், ரேம்ப் வாக்கிங், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

விழாவில் தன்னாா்வலா் வள்ளியப்பன், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். உதவித் தலைமை ஆசிரியா் தங்கராசு நன்றி கூறினாா். ஆசிரியா் வீரபத்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். விழா ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments