FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

49 வினாடிகள் முன்பு
தேரில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேசுவரா்.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலின் தேரோட்ட விழா ஆக. 13-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பிறகு மீனாட்சி சுந்தரேசுவரா் ஒரு தேரிலும், பிடாரி அம்மன் மற்றொறு தேரிலும் எழுந்தருளினா். இதையத்து தோ்களை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

Advertisement

Advertisement

முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ்கள் நிலையை அடைந்தது.

விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments