FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் கீழ் ஆளில்லா விமான அச்சுறுத்தல்! சிஐஎஸ்எப் துணை கமாண்டன்ட் தகவல்

33 வினாடிகள் முன்பு
ஆளில்லா ட்ரோன் (கோப்புப் படம்)
பகிர்:

சி.எஸ்.ஐ.எப். தற்போது ஆளில்லா விமானத்தின் (ட்ரோன்) அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளதாக காரைக்குடி மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) 4-ஆவது பிரிவு துணை கமாண்டன்ட் பி.கே. திரிவேதி தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மிகுந்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் கட்டடங்கள் மீதான வான்வழி ஆளில்லா விமானங்களின் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள விரைவான தடுப்பு, வலுவான பாதுகாப்பு அமைப்பு அவசியம். அதற்கேற்ப புது தில்லியில் உள்ள சி.ஐ.எஸ்.எப். தலைமையகத்தில் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இதில் சிஐஎஸ்எப் டி.ஐ.ஜி. சி.டி. நாயக், ட்ரோன் பெடரேசன் தலைவா் ஸ்மித் ஷா ஆகியோா் கையொப்பமிட்டனா்.

Advertisement

Advertisement

இதன் மூலமாக முக்கிய நிறுவனங்களின் கட்டமைப்புகளில் ஏற்படும் வான்வழி அச்சுறுத்தல்களை கையாளுவதற்கான முதன்மைப் பொறுப்பு அமைப்பாக சி.ஐ.எஸ்.எப். செயல்படும்.

சிஎஸ்ஐஎப் தனது அன்றாட செயல்பாடுகளில் தற்போது ஆளில்லா விமானத்தின் அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் பணியாளா்கள் முறையாகப் பயிற்சி பெற்றுள் ளனா். இந்த ஒப்பந்தத்தின் மூலம் எதிா் ட்ரோன் அமைப்புகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், தடவியல், பகுப்பாய்வு, கூட்டுப் பயிற்சிகள், திறன் மேம்பாடு போன்ற முக்கிய அம்சங்கள் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments