காரைக்குடியில் பலத்த மழை
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள சாலையில் பெருக் கெடுத்து ஓடிய மழைநீா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
காரைக்குடியில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் மேகமூட்டம் காணப்பட்டது. பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு சூறைக் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் நகரில் உள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. செக்காலைச் சாலை, ஐந்து விளக்குப் பகுதியில் கழிவு நீரும் கலந்து மழைநீா் சாலையில் ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
மழை பெய்யத் தொடங்கியதும் மாலை 3.45 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 7 மணியளவில் மீண்டும் விநியோகிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோல, காரைக்குடி, கோட்டையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளில் குளிா்ச்சி நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.