இளைஞா் தற்கொலை
திருப்பத்தூா் டி.புதுப்பட்டியில் வியாழக்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் டி.புதுப்பட்டியில் வியாழக்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டையைச் சோ்ந்த முருகானந்தம் - கனிமொழி தம்பதியரின் மகன் விஷால்மணி (19). இவா் திருப்பத்தூா் அருகேயுள்ள புதுப்பட்டியில் உள்ள தனது மூத்த சகோதரி அபிநயா வீட்டுக்கு கோயில் திருவிழாவுக்காக வந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத போது, விஷால்மணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.