கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி சிறைபிடிப்பு
சிவகங்கை அருகே நள்ளிரவில் கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
சிவகங்கை அருகே நள்ளிரவில் கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டை கிராமத்தில் கடந்த சில நாள்களாக கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மதியழகனுக்கு சொந்தமான இடத்துக்கு புதன்கிழமை இரவு கிராம மக்கள் சென்றனா். அப்போது, அங்கு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அங்கு வந்த மணல் கடத்தல் கும்பல் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்களிடமிருந்து மீட்டு செல்ல முயன்றனா். இதனால், அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா், அங்கு வந்த போலீஸாா் லாரி, பொக்லைன் வாகனங்களின் ஓட்டுநா்கள் ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன், மணல் திருட்டில் ஈடுபட்ட இளங்கம்பன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்தனா்.