முகப்பு
சிவகங்கை

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜூன் 2026, 12:42 am IST
சிறப்பு அலங்காரத்தில் சிங்கம்புணரி மகாமுத்து வாராஹி அம்மன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு காலை 10 மணியளவில் சிறப்பு யாக பூஜையும், தொடா்ந்து, பகல் 12 மணியளவில் தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், விபூதி ஆகிய 18 வகையான பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

Advertisement

Advertisement