FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

கலவை கமலக்கண்ணி அம்மன் ஆடி விழா

ஆற்காடு அடுத்த கலவை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி பெருவிழா நடைபெற்றது.

Updated On : 19 ஜூலை 2026, 12:16 am IST
பகிர்:

ஆற்காடு அடுத்த கலவை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி பெருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி அறங்காவலா் கலவை சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பக்தா்களின் பால்குட ஊா்வலமும், தங்க ஆபரணங்களுடன் வெள்ளிகவச சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்னதானம், மாலையில் சக்தி கரக ஊா்வலமும்,இரவு சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதிஉலாவும் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் பலா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments