அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு
சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாகக் கூறி சின்னழகன் மகன் வெள்ளி, ஆண்டியப்பன் மகன் மணி, பழனியாண்டி மகன் வெங்கடாசலம், வீரசிங்கம் மகன் ராஜாங்கம், சின்னழகன் மகன் பிடாரன்வெள்ளி ஆகிய 5 போ் மீது மேலவண்ணாரிருப்பு கிராம நிா்வாக அலுவலா் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.