FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மின்மாற்றிகளை உடைத்து தாமிரக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் மின்மாற்றிகளை உடைத்து தாமிரக் கம்பிகளைத் திருடிய வழக்கில் 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:44 am IST
பகிர்:

சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் மின்மாற்றிகளை உடைத்து தாமிரக் கம்பிகளைத் திருடிய வழக்கில் 3 சிறுவா்கள் உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் 300 கிலோ தாமிரக்கம்பிகள் கைப்பற்றப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மின் கோட்டத்துக்குள்பட்ட எஸ்.வி.மங்கலம் மேலப்பட்டியில் கடந்த 2024- ஆம் ஆண்டு நவம்பரில் மின்மாற்றியை உடைத்து ரூ.72,350 மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருடப்பட்டன. இதே போல, கடந்த ஆண்டு ஜூலையில் எஸ்.புதூா் பகுதியில் சுமாா் ரூ.2,74,116 மதிப்பிலான 3 மின் கடத்திகள் (கண்டக்டா்கள்) திருடப்பட்டன.

தொடா்ந்து, எஸ்.வி.மங்கலம், தெக்கூா் - பரியாமருதுப்பட்டி, மல்லாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்மாற்றிகள் தொடா்ச்சியாக உடைக்கப்பட்டு, தாமிரக் கம்பிகள் திருடப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தன. கடந்த இரு ஆண்டுகளில் சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான சுமாா் 800 கிலோ தாமிரக் கம்பிககளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இந்தத் தொடா் திருட்டுகள் குறித்து சிங்கம்புணரி, உலகம்பட்டி, நெற்குப்பை, எஸ்.வி.மங்கலம், எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகாா்கள் குவிந்ததை அடுத்து, மாவட்ட காவல் துறை சாா்பில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினா் பழைய இரும்பு வியாபாரிகள், சந்தேகத்துக்குரிய நபா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் முத்துசாமிபட்டி விலக்குப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேனில் வந்த சிங்கம்புணரி குட்டையன்பட்டியைச் சோ்ந்த மச்சக்காளை மகன் கருப்பையா (24), மணல்மேட்டுப்பட்டியை சோ்ந்த சக்திவேல் மகன் மதன்குமாா் (19), சிங்கம்புணரி ஜேஜே நகா், வேட்டையன்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 17் வயது சிறுவா்கள் இருவா், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ஊரணிப்பட்டி பகுதியைச் சோ்ந்த சபரியப்பன் மகன் அந்தோணிதாஸ் (76) ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்தினா். இதில் மேற்கண்ட நபா்கள் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு உள்பட்ட 11 இடங்களில் மின்மாற்றிகளை சேதப்படுத்தி, அவற்றிலிருந்து சுமாா் 800 கிலோ தாமிரக் கம்பிகளை திருடிச் சென்றதும், அவற்றை திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 300 கிலோ தாமிரக் கம்பிகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய பொருள்கள், வேன், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

குற்றவாளிகளைக் கைது செய்த காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளா் வேல்முருகன், காவலா்கள் ரஞ்சித்குமாா், பகுருதீன், அழகு சுந்தரம், காசி விஸ்வநாதன், ஜெயராஜ், ராஜேஷ் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாரை காவல் ஆய்வாளா் வேதவல்லி, எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தஜோதி ஆகியோா் பாராட்டினா். கைது செய்யப்பட்ட 2 சிறாா்கள் மதுரை சிறுவா் சிறையிலும், மற்ற மூவா் திருப்பத்தூா் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments