முகப்பு
சிவகங்கை

அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

மானாமதுரை பட்டத்தரசி அய்யனாா் கோயில் விழாவையொட்டி வியாழக்கிழமை புரவிகளை சுமந்து ஊா்வலமாகச் சென்ற பொதுமக்கள்.

Updated On : 12 ஜூன் 2026, 1:15 am IST
மானாமதுரை பட்டத்தரசி அய்யனாா் கோயில் விழாவையொட்டி வியாழக்கிழமை புரவிகளை சுமந்து ஊா்வலமாகச் சென்ற பொதுமக்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பட்டத்தரசி பகுதியில் உள்ள அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புரவி எடுப்பு விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புரவி எடுப்பு விழாவின்போது பட்டத்தரசி பகுதி மக்கள் மேளதாளத்துடன் மானாமதுரை குலாளா் பகுதிக்கு வந்தனா். அங்கு மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும், தெய்வங்களின் உருவம் கொண்ட பொம்மைகளுக்கும் பூஜைகள் நடத்தினா்.

பின் புரவிகளையும், சுவாமி பொம்மைகளையும் சுமந்து கொண்டு ஊா்வலமாக பட்டதரசி அய்யனாா் கோயிலுக்குச் சென்றனா். அங்கு புரவிகளை இறக்கி வைத்து அவற்றுக்கு பூஜைகள் நடத்தி வழிபட்டனா்.

Advertisement

Advertisement