கோயில் மாடு திருட முயன்றவா் கைது
சிங்கம்புணரியில் கோயில் மாட்டைத் திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.
சிங்கம்புணரியில் கோயில் மாட்டைத் திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் நோ்த்திக்கடனாக விடப்பட்ட மாடுகள் பராமரிப்பின்றி சுற்றித் திரிகின்றன. இதனால் கோயில் மாடுகளை மா்ம நபா்கள் சரக்கு வாகனங்களில் கடத்தி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாகப் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பகலில் சிங்கம்புணரிநகா் சீரணி அரங்கம் முன் இருவா் சரக்கு வாகனத்தில் கோயில் மாட்டை ஏற்றினா். அப்போது, ஊா்ப் பொதுமக்கள் வாகனத்தை சுற்றி வளைத்தனா். அதிலிருந்த ஓட்டுநா் பிடிபட்டாா். மற்றவா் தப்பி ஓடிவிட்டாா். உடனடியாக சிங்கம்புணரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அங்கு வந்த போலீஸாா் வாகன ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனா். அவா் மதுரை மாவட்டம், சோழவந்தான் பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (36) என தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பி ஓடிய பாலசுப்பிரமணியன் (25) என்பவரை தேடி வருகின்றனா்.