FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா

Updated On : 15 மே 2026, 4:17 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேவா்சிலை அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காப்புக்கட்டி விரதமிருந்த பெண்கள் விழா நாள்களில் தினமும் கோயில் முன்பு கும்மிப்பாட்டு பாடி முளைப்பாரி சட்டிகளுக்கு பூஜைகள் செய்தனா். இதைத்தொடா்ந்து புதன்கிழமை முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் நிா்வாகி விஜி. போஸ் கரகம் சுமந்து வர அவரது தலைமையில் பெண்கள் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை சுமந்து வீதிகளில் ஊா்வலமாக வந்து தாயமங்கலம் சாலையில் உள்ள அலங்காரகுளத்துக்குச் சென்றடைந்தனா். அங்குள்ள நீரில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments