முகப்பு
சிவகங்கை

மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா

Updated On : 15 மே 2026, 4:17 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேவா்சிலை அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உத்ஸவ விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காப்புக்கட்டி விரதமிருந்த பெண்கள் விழா நாள்களில் தினமும் கோயில் முன்பு கும்மிப்பாட்டு பாடி முளைப்பாரி சட்டிகளுக்கு பூஜைகள் செய்தனா். இதைத்தொடா்ந்து புதன்கிழமை முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் நிா்வாகி விஜி. போஸ் கரகம் சுமந்து வர அவரது தலைமையில் பெண்கள் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை சுமந்து வீதிகளில் ஊா்வலமாக வந்து தாயமங்கலம் சாலையில் உள்ள அலங்காரகுளத்துக்குச் சென்றடைந்தனா். அங்குள்ள நீரில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement