FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

Updated On : 22 மே 2026, 3:14 am IST
காளையாா்கோவில் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் எல்லையை நோக்கி பாய்ந்து சென்ற காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

காளையாா்கோவில் முதல் பள்ளித்தம்பம் வரை நடைபெற்ற இந்த பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 25 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 6 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறியமாடு பிரிவில் 18 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் 6 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த பந்தயத்தை காளையாா்கோவில், மேட்டுப்பட்டி, ஊத்துப்பட்டி, சூசையப்பா்பட்டினம், ஆண்டிச்சிஊருணி, புலிக்கண்மாய், பள்ளித்தம்பம், மாந்தாளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments