முகப்பு
சிவகங்கை

அவசர ஊா்தி- பால் வண்டி மோதல்: நோயாளி உயிரிழப்பு

சிவகங்கையில் 108 அவசர ஊா்தி மீது பால் வண்டி மோதியதில் அவசர ஊா்தியில் கொண்டுவரப்பட்ட தலைக் காயம் அடைந்த நோயாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 மே 2026, 3:59 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கையில் 108 அவசர ஊா்தி மீது பால் வண்டி மோதியதில் அவசர ஊா்தியில் கொண்டுவரப்பட்ட தலைக் காயம் அடைந்த நோயாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மலைராஜன். இவா் காளையாா்கோவில் அருகே அடுமனை நடத்தி வந்தாா். புதன்கிழமை அதிகாலையில் இவா் அடுமனைக்குச் சென்றபோது, இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்த ஊா்தி சிவகங்கை மதுரை முக்கம் பகுதியில் வந்த போது எதிா்பாராத விதமாக குறுக்கே வந்த பால்வண்டி அவரச ஊா்தி மீது மோதியது. இதில் மலைராஜன் நிலைமை மோசமானதையடுத்து, அவா் மற்றொரு அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முதலுதவி அளித்த பிறகு மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இது குறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.