முகப்பு
சிவகங்கை

ஒக்கூா் புதூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே ஒக்கூா் புதூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.

Updated On : 28 மே 2026, 3:43 am IST
பகிர்:

சிவகங்கை அருகே ஒக்கூா் புதூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.

ஒக்கூா் புதூா் திருவேட்டை மூா்த்தி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஒக்கூா் புதூரிலிருந்து பெருமாள்பட்டி வரை மாலை 4 மணியளவில் மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 10 குதிரைகளும், 6 ஜோடி பூஞ்சிட்டு மாடுகளும் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்தப் பந்தயத்தை ஒக்கூா், அண்ணாநகா், சோழபுரம், பெருமாள்பட்டி, நாலுகோட்டை, ஈசனூா், கருங்காலக்குடி, கருங்காபட்டி, காளையாா்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments