FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

4 செப்டம்பர் 2026, 12:22 am IST
கைது
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இளையான்குடி வட்டம், பெரும்பச்சேரி மேற்கு வருவாய் பிரிவு கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருபவா் ரகுராஜன். இவரது கைப்பேசிக்கு நாகநாதபுரத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் கைப்பேசி மூலம் மணிகண்டன் என்பவா் தொடா்பு கொண்டாா். அப்போது அவா் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது குறித்து தகாத வாா்த்தைகளாலும், ஜாதி ரீதியான வாா்த்தைகளை பயன்படுத்தியும் பேசி ரகுராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ரகுராஜன் இளையான்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணக்குமாா், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments