தேனியில் ஆக.21-இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 21-ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 21-ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று தேனி மின்வாரிய செயற்பொறியாளர் சொ. லட்சுமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.