தேனி அருகே பேருந்து மோதி விவசாயி சாவு
தேனி அருகே செவ்வாய்க்கிழமை இரவு தள்ளுவண்டி மீது தனியார் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
தேனி அருகே செவ்வாய்க்கிழமை இரவு தள்ளுவண்டி மீது தனியார் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
தேனி அருகே ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (62). இவர் தனது மனைவி பழனிக்கொடியுடன் தோட்டத்தில் விளைந்த பருத்தியை சேகரித்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு தள்ளுவண்டியில் எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து தர்மராஜ் மீது மோதியதாம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.