முந்தல் மலை கிராமத்தில் நிபா வைரஸ் விழிப்புணர்வு முகாம்முந்தல் மலை கிராமத்தில் நிபா வைரஸ் விழிப்புணர்வு முகாம்
போடி அருகே முந்தல் மலை கிராமத்தில் புதன்கிழமை, போடி நகராட்சி சார்பில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
போடி அருகே முந்தல் மலை கிராமத்தில் புதன்கிழமை, போடி நகராட்சி சார்பில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதற்கு நகராட்சி நகர் நல அலுவலர் பா.ராகவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மு.சுவாமிநாதன் பங்கேற்று கிராம மக்களிடம் நிபா வைரஸ் பரவும் விதம் குறித்து விளக்கினார். மேலும் சுகாதார பிரிவு சார்பில் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து கேரளாவுக்கு செல்லும் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் நிபா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க கடைபிடிக்க வேண்டிய வழிகள் குறித்து விளக்கினர். கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் பயணம் செய்வோரிடம் மருத்துவ பரிசோதனையும் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.