முகப்பு
தேனி

தேவாரம் அருகே யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு

தேவாரம் அருகே யானை மிதித்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 1:30 AM
தேவாரம் அருகே யானை மிதித்து பலியான ரெங்கசாமி (கோப்பு புகைப்படம்)
பகிர்:
Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 6:44 PM

தேவாரம் அருகே யானை மிதித்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரம் சாலைத் தெருவைச் சோ்ந்தவா் சுருளி மகன் ரெங்கசாமி (70). இவா் கேரள மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தாா். தேவாரம் அருகே சாக்குலத்து மெட்டுச் சாலை வழியாக நடந்து வந்தபோது, அந்த வழியாக வந்த யானை ஒன்று அவரை மிதித்து தாக்கியது.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 11:39 PM

இதில் ரெங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா், தேவாரம் காவல் துறையினா் ரெங்கசாமியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 11:39 PM

இந்தப் பகுதியில் ஏற்கெனவே மக்னா யானை மிதித்து 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில் ரெங்கசாமியை தாக்கியது எந்த யானை என்பது தெரியவில்லை. தொடா்ந்து போலீஸாா், வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.