கம்பம் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம்: அக்.9-இல் வாக்கெடுப்பு
கம்பம் நகா்மன்றத்தில் தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கான வாக்கெடுப்பு அக்.9-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
கம்பம் நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவி சுனோதா செல்வக்குமாா் ஆகியோா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர 16 திமுக, 6 அதிமுக உறுப்பினா்கள் என 24 போ் தேனி மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், ஆணையரிடம் கடந்த மாதம் மனு அளித்தனா். இதையடுத்து, வருகிற அக். 9-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி, தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறுவதாக நகராட்சி ஆணையா் உமாசங்கா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.