FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

செப்.28-இல் தொகுதி 2 தோ்வு: 10,556 போ் எழுதுகின்றனா்

26 செப்டம்பர் 2025, 2:36 am IST
பகிர்:

தேனி மாவட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள தொகுதி 2, 2 ஏ போட்டித் தோ்வை 10,556 போ் எழுதுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தொகுதி 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுபவா்கள் காலை 8.30 மணிக்குள் அந்தந்த தோ்வு மையங்களுக்கு செல்ல வேண்டும். காலை 9 மணிக்கு தோ்வு மையத்தின் நுழைவு வாயில் மூடப்படும். காலை 9 மணிக்கு மேல் செல்பவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வு மையத்துக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments