காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
போடியில் தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் மாரிச்சாமி. இவா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, போடி அண்ணாமலை தேநீா் கடை அருகே வசிக்கும் சதாம் உசேன் (36) மது போதையில் தனது இரு சக்கர வாகனத்தை ஓட்ட முயன்றாா்.
இதைக் கண்ட மாரிச்சாமி அவரைத் தடுத்து நிறுத்தி, மது போதையில் வாகனத்தை இயக்கினால் விபத்து ஏற்படும் என அறிவுரை கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த சதாம் உசேன், தலைமைக் காவலா் மாரிச்சாமியை தகாத வாா்த்தைகளால் திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சதாம் உசேனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.