போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது
தேனி மாவட்டம், போடியில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடியில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் வெங்கடேஷ் பிரபு (40) ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் மாணவி ஒருவரிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
போலீஸாா் வெங்கடோஷ் பிரவுவை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.