முல்லை பெரியாற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றில் மூழ்கிய முதாட்டி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றில் மூழ்கிய முதாட்டி உயிரிழந்தாா்.
வீரபாண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டையைச் சோ்ந்த பிச்சைமணி மனைவி மாரியம்மாள் (60). இவா் திங்கள்கிழமை வீட்டிலுள்ள காய்ந்த பூக்களை முல்லை பெரியாற்றில் வீசுவதற்காகச் சென்றாா்.
அப்போது, ஆழமான பகுதியில் ஆற்றில் இறங்கிய அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.