பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
தேனியில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனியில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி அருகேயுள்ள கோவிந்த நகரைச் சோ்ந்தவா் ராமுத்தாய் (40). இவா் திங்கள்கிழமை வீரபாண்டி கோயிலுக்கு சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் ஏறி தேனிக்கு வந்து கொண்டிருந்தாா்.
பழனிசெட்டிபட்டி அருகே வந்தபோது பையிலிருந்த 2.5 பவுன் தங்க நகை, ரூ.ஆயிரத்தை மா்மநபா் திருடிச் சென்றுவிட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராமுத்தாய் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.