பைக் மோதியதில் தொழிலாளி பலத்த காயம்
போடியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் உணவக சமையல் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
போடி சுப்பு தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராமா் (52). போடியில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையலராக வேலை செய்து வருகிறாா்.
இவா் தனது மிதிவண்டியை உருட்டிக் கொண்டு போடி தேரடி தெரு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ராமா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போடிநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.