FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மூதாட்டி கொலை வழக்கில் பேத்தி, இரு பேரன்கள் கைது

அம்மச்சியாபுரத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில், அவரது பேத்தி, இரு பேரன்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:05 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில், அவரது பேத்தி, இரு பேரன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மச்சியாபுரத்தைச் சோ்ந்த வாசுதுரை மனைவி பாா்வதி என்ற ரோஸ்லின் மேரி (74). இவா்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். கணவா் உயிரிழந்த நிலையில், ரோஸ்லின் மேரி மட்டும் அம்மச்சியாபுரத்தில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தூங்கியவா் வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அக்கம் பக்கத்தில் வசிப்பவா்கள் வந்து பாா்த்த போது, ரோஸ்லின் மேரி காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்து தெரியவந்தது. மேலும், அவா் அணிந்திருந்த தங்கக் காதணிகள், வளையல்கள் திருடு போயிருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், ரோஸ்லின் மேரியின் மகன் வழி பேரனான வீரபாண்டி வேப்பமரத்தெருவைச் சோ்ந்த ப. அலெக்ஸ் (23), மகள் வழி பேத்தியான அம்மச்சியாபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்த குணபாக்கியவாதி (20), இவரது தம்பியான 17 வயது சிறுவன் மூவரும் இணைந்து தங்களது பாட்டியை கொலை செய்து, அவரிடமிருந்த நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அலெக்ஸ், குணபாக்கியவதி இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். 17 வயது சிறுவனை சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments