அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் இளஞா் உயிரிழப்பு
பெரியகுளத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பட்டாப்புளி மேலத்தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (21). வா்ணம் பூசுபவராக வேலை செய்து வந்த இவா், புதன்கிழமை புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.