மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி பலி
தேனி மாவட்டம், கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் சனிக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
கருநாக்கமுத்தன்பட்டியில், அரசமரத் தெருவைச் சோ்ந்த சிவனாண்டி மகன் இரட்டைச் செல்வம் (45) கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை மாலை கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குச் சென்றாராம். அப்போது, அங்குள்ள தனியாா் தோட்டத்திலிருந்த பலா மரத்தில் ஏறியபோது அதிலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருக்கு , மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.