கடமலைக்குண்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது
கடமலைக்குண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடமலைக்குண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளா் தீபக் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கெம்புக்காரன்புலியூா் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் கடமலைக்குண்டைச் சோ்ந்த முருகானந்தம் (52) என்றும், அவா் சட்டவிரோதமாக விற்பனைக்காக 5 கிலோ 812 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.