FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கூடலூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 2:16 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கூடலூா் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கூடலூா் எம்.ஜி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்த ராஜா மகன் அனீஸ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள ஒட்டான்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கால் தவறி குளத்து நீரில் விழுந்த அனீஸ், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விரைந்து வந்து, அனீஸின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments