கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் வெங்கடாசலபதி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் தினேஷ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை காமயகவுண்டன்பட்டி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துத்து இடமளிக்கும் வகையில் பையுடன் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் வைத்திருந்த பையில் 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில், கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் (48), கன்னியாகுமரி மாவட்டம், முட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் (61) என்பதும், இவா்கள் கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரன், அந்தோணிராஜ் ஆகியோரைக் கைது செய்து, இவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.