பள்ளி மாணவி உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீநிதி. இவா் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், புதன்கிழமை மாலை வழக்கம்போல பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் மயங்கி கீழே விழுந்தாராம். உடனடியாக அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.