முகப்பு
தேனி

பள்ளி மாணவி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:07 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீநிதி. இவா் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், புதன்கிழமை மாலை வழக்கம்போல பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் மயங்கி கீழே விழுந்தாராம். உடனடியாக அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement