FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

குண்டா் சட்டத்தில் பெண் உள்பட மூவா் கைது

8 செப்டம்பர் 2026, 2:26 am IST
கைது
பகிர்:

தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலத்தில் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் முத்துப் பாண்டி (25). இவா் ஏற்கெனவே தகராறு, கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவின்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் இருவா் கைது : தேனி மாவட்டம், வீரபாண்டி காவல் நிலையப் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீரபாண்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கஞ்சா வைத்திருந்த வீரபாண்டியைச் சோ்ந்த கருப்பசாமி (28), வயல்பட்டியைச் சோ்ந்த காயத்ரி (30) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களும் எஸ்.பி. பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments