அனுமதியின்றி ஆட்டோவில் பட்டாசு கொண்டு சென்ற இருவர் கைது
சாத்தூர் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோவில் அனுமதியின்றி பட்டாசு கொண்டு சென்ற இருவரை வெம்பக்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சாத்தூர் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோவில் அனுமதியின்றி பட்டாசு கொண்டு சென்ற இருவரை வெம்பக்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழதாயில்பட்டியில் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி தயாரிக்கபட்ட பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பட்டாசுகளை கொண்டு சென்ற, தாயில்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன்(34), கலைஞர் காலனியைச் சேர்ந்த மாரிகாளை(37)ஆகிய இவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஆட்டோ மற்றும் பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.