சிவகாசியில் சொத்துவரி உயர்வை 25 சதவீதமாக்க கோரிக்கை
சிவகாசியில் சொத்துவரி உயர்வை 25 சதவீதமாக்க வேண்டும் என சிவகாசி சிறு, குறு வியாபாரிகள் சங்க நிர்வாகி பி.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகாசியில் சொத்துவரி உயர்வை 25 சதவீதமாக்க வேண்டும் என சிவகாசி சிறு, குறு வியாபாரிகள் சங்க நிர்வாகி பி.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
சிவகாசி நகரில் 2008 ஆம் ஆண்டு புதிய சொத்துவரியாக குடியிருப்புகளுக்கு சதுர அடிக்கு ரூ.2.50 பைசாவும், தொழிற்சாலைகளுக்கு சதுர அடிக்கு ரூ.5.01பைசாவாகவும், கடை, அலுவலகம், கிட்டங்கி ஆகியவற்றுக்கு சதுர அடிக்கு ரூ.7.51 பைசாவாகவும் உயர்த்தப்பட்டு, நகராட்சி வசூல் செய்து வருகிறது.
தொடந்து சிவகாசி நகராட்சியில் 2017ஆம் ஆண்டு முதல் ரூ.500 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.120 எனவும், ரூ.500-க்கு மேல் ரூ.1000 வரை சொத்துவரி செலுத்துபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.240 எனவும், ரூ.1000-த்துக்கு மேல் ரூ.2000 வரை சொத்துவரி செலுத்துபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.360 எனவும், ரூ.2000-க்கு மேல் சொத்துவரி உள்ளவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.600 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சொத்துவரி 50 சதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சிவகாசியில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சொத்துவரி உயர்வு பொதுமக்களை பாதிக்கும்.
எனவே சொத்துவரி உயர்வை 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இம்மனுவின் நகல் நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.